ரணில் தலைமையில் நாளை போர் வெற்றி விழா..!
14வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் இராணுவ வெற்றிவிழா நிகழ்வு நாளை (19) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
ரணவிரு சேவா அதிகாரசபையானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் அதிபரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.