மன்னாரில் இராணுவத்தினரால் அமைக்கப்படும் புதிய பௌத்த விகாரை: சாள்ஸ் நிர்மலநாதன் திடீர் விஜயம் …!

மன்னாரில் இராணுவத்தினரால் அமைக்கப்படும் புதிய பௌத்த விகாரை: சாள்ஸ் நிர்மலநாதன் திடீர் விஜயம் …!

மன்னார் - உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவில், புதிதாக பௌத்த விகாரையை அமைப்பதற்கான வேலை திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் - உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (22.05.2023) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பல பாகங்களிலும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.