குடிவரவு திணைக்களத்தில் சடலமொன்று கண்டெடுப்பு..!

குடிவரவு திணைக்களத்தில் சடலமொன்று கண்டெடுப்பு..!

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்தின் கட்டிடமொன்றின் மேல் மாடியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் அந்த அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.

இராணுவ அதிகாரி ஒருவர் சேவை நோக்கத்திற்காக இன்று காலை கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள துப்புரவுப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்த போது, அதன் முன் நாற்காலியில் இந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.

இதன்படி, தலங்கம காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.