மாவீரன் பல்லவராயனுக்கு பூநகரியில் சிலை..!

மாவீரன் பல்லவராயனுக்கு பூநகரியில் சிலை..!

கிளிநொச்சி - பூநகரி, பல்லவராயன்கட்டுச் சந்தியில் மாவீரன் பல்லவராயனின் சிலை திறப்புவிழா இடம்பெறவுள்ளது.

நாளை(05) காலை 10.30 மணியளவில் சிலை திறப்பு நிகழ்வானது இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொள்ளவுள்ளார்.

கி.பி 10ஆம் நூற்றாண்டில் வன்னி பெருநிலப்பரப்பில் சுயாட்சியுடைய நகரங்களையும்,இராணுவ கட்டமைப்புக்களையும் வைத்து ஆட்சி செய்த சிறந்த ஆட்சியாளராக மாவீரன் பல்லவராயன் போற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery