வனிதாவின் அதிரடி முடிவு: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு

வனிதாவின் அதிரடி முடிவு: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு

கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர்பால் திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக கடந்த சில நாட்களாக இடம்பெற்றது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி வனிதா விஜயகுமார், சூர்யா தேவி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் உள்பட ஒருசிலர் வனிதா திருமணம் குறித்து விவாதம் செய்ததும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

குறிப்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதாவின் சமீபத்திய விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று கஸ்தூரி மற்றும் வனிதா ஆகிய இருவரும் டுவிட்டரில் மோதிக் கொண்டது டுவிட்டர் பயனாளிகளுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் தற்போது வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதன்படி டுவிட்டரில் இருந்து அவர் திடீரென விலகியுள்ளார். வனிதாவின் டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக உள்ளது என்பதும், வனிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. வனிதாவின் இந்த முடிவால் டுவிட்டர் பயனாளிகள் இந்த பிரச்சனையில் இருந்து தப்பினர் என்பது மட்டும் உண்மை