20 அடி பள்ளத்தில் புரண்டு முச்சக்கரவண்டி! பாடசாலை மாணவர்கள் படுகாயம்...

20 அடி பள்ளத்தில் புரண்டு முச்சக்கரவண்டி! பாடசாலை மாணவர்கள் படுகாயம்...

பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று சுமார் 20 அடி பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (30.06.2023) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.