தாயுடன் முரண்பாடு - தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 19 வயது இளைஞன்..!

தாயுடன் முரண்பாடு - தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 19 வயது இளைஞன்..!

அம்பாறை - அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பனங்காட்டு பாலத்திற்கு அருகில் உள்ள பூர்த்தி செய்யப்படாத தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் அக்கரைப்பற்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி அலக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாயுடன் முரண்பாடு - தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 19 வயது இளைஞன் | Batticalo 19 Years Boy Death

இந்நிலையில் தாயுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக வீட்டை விட்டு இரு நாட்களுக்கு முன்னர் வெளியேறிய இளைஞரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.