கொடூரமாக கொலை செய்யப்பட்ட தந்தை - மகள் படுகாயம்!
அவிசாவளை – பதுவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரை காயப்படுத்தியதுடன், அவரது தந்தையை கொலை செய்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் அவிசாவளை – பதுவத்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான யுவதியும் அவரது தந்தையும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.