எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற கார்..!
கொட்டாவ சித்தமுல்லை பெட்ரோல் நிரப்பும் நிலையமொன்றுக்கு காரில் வந்த நபர் ஒருவர் 21,320 ரூபா பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டு QR குறியீட்டை காண்பிப்பதாக கூறி பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த காரின் இலக்கத் தகடு போலியானது என்பது தெரியவந்தது.

கார் எரிபொருளை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.