
உலக சாதனை படைத்த யாழ்.நபர்..!
தென்மராட்சி - மட்டுவிலை பகுதியில் தாடையால் வாகனத்தை இழுத்து ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற உலக சாதனை நிகழ்வில் இவர் 7 நிமிடம் 48 செக்கன்களில் 1550 கிலோ எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
தென்மராட்சி, மட்டுவிலை சேர்ந்த 59 வயதான திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கை கிளை தலைவர் யோ.யூட் நிமலன்,சந்திரபுரம் கிராம அலுவலர் சுபாசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.