நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறை..!

நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறை..!

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை தண்ணீரில் மிதந்த நிலையில் மீட்டதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வயோதிப பெண் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில் குதித்திருக்கிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.