
அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது: யாழில் சம்பவம்...
யாழில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச பேருந்தில் கஞ்சாவினை கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (18.07.2023) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்நேகநபரிடமிருந்து 4 கிலோ 160 கிராம் உள்ளடங்கிய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஆனையிறவு சோதனை சாவடியில் பேருந்தினை சோதனை செய்தபோது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.