நேற்று இரவு கோரம் - முதியவர் வெட்டிப்படுகொலை.
நிலத்தகராறு காரணமாக நேற்று இரவு (22) முதியவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இரத்தினபுரி, ஹிந்தெல்லன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் தாக்குதலில் உயிரிழந்தவரின் 36 , 37 வயதுடைய இரண்டு மகன்களும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக நிலவி வந்த நிலத்தகராறு தொடர்பான முறுகல் நேற்று இரவு வாய்த்தர்க்கமாக முற்றி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண் சந்தேகநபர்கள் மற்றும் ஆண் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் 18, 65 மற்றும் 48 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.