
20 ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கப்பூரில் பெண்ணுக்கு தூக்குத் தண்டனை - அதிர்ச்சியில் உலகம்.
சிங்கப்பூரில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான 45 வயதான பெண்ணுக்கு 20 ஆண்டுகள் பின்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் சரிதேவி ஜமாலி என்பவருக்கே இன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
31 கிராம் ஹெரோயினை தனது வீட்டில் வைத்து இருப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில் அந்த தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது.
சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்துபவர்களுக்கும் 15 கிராமுக்கு மேல் ஹெரோயின் கடத்துபவர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
தூக்கு தண்டனையை இரத்து செய்து மனிதர்கள் திரும்பி வாழ வாய்ப்பு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதும் போதைப்பொருள் விடயத்தில் சிங்கப்பூர் கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.