அரச ஊழியர்களுக்கு பேரிடி - விடுமுறை தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை.

அரச ஊழியர்களுக்கு பேரிடி - விடுமுறை தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை.

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்காக விடுமுறை பெற்றுள்ள அரச ஊழியர்கள், முறையான வழிகளில் இலங்கைக்கு பணத்தை திருப்பி அனுப்பத் தவறினால், அவர்களுக்கான சலுகைகள் நீக்கபடும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

முறையான வழிகளில் பணத்தை அனுப்பத் தவறினால், மேலதிகமாக, பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிற உட்பிரிவுகளின் நன்மைகளையும் அவர்கள் இழக்க நேரிடும் என்று திறைசேரி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு பேரிடி - விடுமுறை தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை | Government Employee Government Staffs Salary

முன்னதாக, விடுமுறை பெற்றுள்ள அரச உத்தியோகத்தர்கள், பணிமூப்பின் போது அவர்களின் விடுமுறைக் காலம் பரிசீலிக்கப்பட மாட்டாது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே தற்போதைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.