இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம்..!
இலத்திரனியல் கடவுச்சீட்டு திட்டத்தை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
வருடாந்தம் சுமார் 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதுடன், 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரங்களை கொள்வனவு செய்ய வேண்டும்.
இதன்படி, தற்போதுள்ள கடவுச்சீட்டு வழங்கும் முறையைத் தொடரவும் எதிர்காலத்தில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை மீள்பரிசீலனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.