தமிழர் தலைநகரில் முல்லைத்தீவு யுவதியின் மோசமான செயற்பாடு.
தமிழர் தலைநகரான திருகோணமலையில் முல்லைத்தீவைச் சேர்ந்த யுவதி ஒருவர் விபசாரத்தில் ஈடுபட்ட நிலையில் பிடிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் விபசார விடுதி இயங்கி வந்த நிலையிலேயே அங்குவைத்து குறித்த யுவதி ஊர் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இவருடன் சேர்த்து அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த யுவதியும் பிடிக்கப்பட்டுள்ளார்.இவர்கள் இருவருக்கும் 25 தொடக்கம் 30 வயது வரை இருக்கும் என உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
பல வருடங்களாக மறைமுகமாக இயங்கி குறித்த விபசார விடுதி நேற்று (31) இரவு அப்பிரதேச மக்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருவரையும் திருகோணமலை மாவட்ட பதில் நீதவான் முன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.