
தொடருந்துடன் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
(05.08.2023) மதியம் 2 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான திலீபன் பிரியா என்ற பெண்ணே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.