யாழில் திடீரென குறுக்கே பாய்ந்த நாயால் இளைஞனுக்கு நேர்ந்த கதி.

யாழில் திடீரென குறுக்கே பாய்ந்த நாயால் இளைஞனுக்கு நேர்ந்த கதி.

நவாலி வழுக்கையாறு வெளியால் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞன் நாயுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம் இடம் பெற்றதோடு படுகாயமடைந்த அவ் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழில் திடீரென குறுக்கே பாய்ந்த நாயால் இளைஞனுக்கு நேர்ந்த கதி | Young Man Due To The Dog Running Across The Jaffnaஅவ் இளைஞன் பயணம் செய்துகொண்டிருந்த வேளை நாயொன்று திடீரென குறுக்கே பாய்ந்தததால் இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த தங்கராசா துஷ்யந்தன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.