
தாயின் கோபத்தால் மனவிரக்தியடைந்த குடும்பஸ்தர் ஒருவரின் தவறான முடிவு.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தாய் பேசாத காரணத்தால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் அவருடன் சிலநாட்கள் பேசவில்லை.
இதனால் குறித்த நபர் கடந்த (14.08.2023) ஆம் திகதி எலிப்பாசனம் அருந்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தங்கராசா சதீஷ் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 8மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.