
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் தெரிவு!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்டதாக இன்று (18.08.2023) ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளார் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.