
யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம்-உடுத்துறையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுத்துறைக்கு அப்பால் வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைப்பற்றப்பட்ட 130 கிலோ போதைப்பொருளின் சந்தை பெறுமதி 43 மில்லியன் ரூபாய் என்று இலங்கை கடற்படை மதிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் உடுத்துறையைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர், கேரள கஞ்சா மற்றும் படகுகள் சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.