யாழ் உணவகத்தில் சோடா அருந்தியவருக்கு நேர்ந்த சோகம்.

யாழ் உணவகத்தில் சோடா அருந்தியவருக்கு நேர்ந்த சோகம்.

யாழில் உணவகம் ஒன்றில் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (19) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் உணவகத்தில் சோடா அருந்தியவருக்கு நேர்ந்த சோகம் | Man Dies After Drinking Soda In Jaffna Restaurantசங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவரே உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.