
யாழில் சட்டத்துக்கு புறம்பாக தாயாரிக்கப்பட்ட போதைப்பொருட்களுடன் இருவர் கைது..!
யாழ்ப்பாணம்-ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது சம்பவமானது இன்று(20.08.2023) இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் 21 கிராம் 450 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.