யாழ். பல்கலை மாணவி வித்தியாவின் கைவண்ணத்தில் உருவான நல்லூர் கந்தசுவாமி ஆலயம்!

யாழ். பல்கலை மாணவி வித்தியாவின் கைவண்ணத்தில் உருவான நல்லூர் கந்தசுவாமி ஆலயம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்றைய தினம் ஒகஸ்ட் 21 ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், யாழ்.பல்கலைக்கழக மாணவி அல்லைப்பிட்டியில் அகாலமரணமடைந்த வித்தியா ( அம்முக்குட்டி ) கைவண்ணத்தில் உருப்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் இன்றைய தினம் முகநூலில் பாபுகி முத்துலிங்கம் என்பவரால் நினைவு கூரப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை மாணவி வித்தியாவின் கைவண்ணத்தில் உருவான நல்லூர் கந்தசுவாமி ஆலயம்! | Nallur Kandaswamy Temple Student Vidya Ammu Kutty

குறித்த மணல் சிற்பம் அன்றைய நாட்களில் தமிழர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட ஒன்றாகும்.

மேலும் குறித்த மணம் சிற்பம் ஒவ்வொரு வருடமும் நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ நாட்களில் வந்து அம்முவின் கைவண்ணத்தை நினைவுபடுக்கின்றன.