கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! சோக சம்பவம்.

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! சோக சம்பவம்.

யாழ்ப்பாணத்தில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.

இச் சம்பவம் தெல்லிப்பழையில் நேற்றையதினம் (26-08-2023) இடம்பெற்றுள்ளது.

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! சோக சம்பவம் | Person Was Died While Dancing On Stage In Jaffna

சோடா கொம்பனி வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 61 வயதான நாகராஜா சசிதரன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது.

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! சோக சம்பவம் | Person Was Died While Dancing On Stage In Jaffnaஇதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.

அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.