யாழில் ஆட்களற்ற வீடுகளில் நடக்கும் கூத்துக்கள்; அச்சத்தில் மக்கள்!

யாழில் ஆட்களற்ற வீடுகளில் நடக்கும் கூத்துக்கள்; அச்சத்தில் மக்கள்!

  யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அந்த வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனையே பயணிக்கின்றனர்.

யாழில் ஆட்களற்ற வீடுகளில் நடக்கும் கூத்துக்கள்; அச்சத்தில் மக்கள்! | Rumors In Deserted Houses In Jaffna People In Fearயாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், ஊசி மூலம் அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் , சந்தேகத்திற்கு உரிய இடங்களில் பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.