யாழில் கணவருடன் சென்ற மகளை கடத்தியதாக முறைப்பாடு செய்த தாய்.

யாழில் கணவருடன் சென்ற மகளை கடத்தியதாக முறைப்பாடு செய்த தாய்.

யாழில் பிரிந்து வாழ்ந்துவந்த கணவருடன் மனைவி சென்ற நிலையில் தனது மகள் , கணவரால் கடத்தி செல்லப்பட்டதாக தாயார் பொலிஸில் முறைபாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் நேற்றையதினம் (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Coupleகணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கணவன் மற்றும் மனைவி தத்தமது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென கணவர் அவரது சகாக்கள் சகிதம் வாள் கொண்டு சென்று வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி மனைவியை கார் ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Srilanka policeஎனினும் 24 வயதான குறித்த யுவதி கணவருடன் மனமொத்தே சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை பிரிந்திருந்த தம்பதிகள் தொலைபேசி ஊடான உரையாடல்களினால் சமாதானமான நிலையில் தன்னை அழைத்துசெல்லுமாறு யுவதி கணவருக்கு கூறியுள்ளார்.

மேலும் பெண்ணின் வீட்டிற்கு அருகிலேயே கணவனின் வீடும் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் கணவருடன் மகள் மீண்டும் வாழ் சென்றது பிடிக்காத காரணத்தாலேயே மகள் கடத்தப்பட்டதாக பெண்ணின் தாயார் முறைப்பாடு செய்ததாகவும் கூறப்படுகின்றது.