க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை!

க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை!

நேற்றையதினம் வெளியான 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில் பௌதிக பிரிவில் 6 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும் யாழ் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர். 

இதற்கமைய விஞ்ஞானப் பிரிவில் முறையே ஆனந்தஜோதி வித்தியாசாகர், கண்ணன் பவிதரன், நாகசேன்னன் சாரங்கன், தர்மலில்கம் அமலன், ரகுதாதன் தனுசன் ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றுள்ளனர்.

கணிதப் பிரிவில் சிறிபண்டாகரன் சிநேகன், லெஸ்லி பாஸ்கரதேவன் அபிசேக், சந்திரசேகரம் அபிசேகன், பகீரதன் திபேக், மொஹமட் நிஸ்பார் மொஹமட் இஸ்சாத் ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றுள்ளனர்.

அதேவேளை, விமலேஸ்வரன் கிசாலன் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 33 பேர் 3 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.