
யாழ்ப்பாணத்தில் மூவர் கைது..!
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் மூன்றுபேர் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்குடன் உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை எடுத்து வந்த கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 33 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கொழும்பு தொட்டலங்க பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
இதேவேளை நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இன்று மாலை அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்படுவார் என்றும் காவல்துறையினர் கூறினர்.