யாழ்ப்பாணத்தில் ஆலய சூழலில் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்! சோக சம்பவம்.

யாழ்ப்பாணத்தில் ஆலய சூழலில் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்! சோக சம்பவம்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய சூழலில் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் ஆலய சூழலிலேயே உயிரிழந்துள்ளார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக உள்ள நிலையில் அங்கிருந்து யாசகர்களை அகற்றும் செயற்பாட்டை ஆலய நிர்வாகம் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஆலய சூழலில் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்! சோக சம்பவம் | Old Man Die Living Temple Area For 30 Years Jaffna

குறித்த நடவடிக்கையின் போது அங்கிருந்து செல்ல மறுத்த குறித்த முதியவர் இன்றைய தினம் (12-09-2023) உயிரிழந்துள்ளார்.

சுட்டியபுலம் வசாவிளானைச் சேர்ந்த  76 வயதான முருகன் தியாகு என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழ்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆலய சூழலில் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்! சோக சம்பவம் | Old Man Die Living Temple Area For 30 Years Jaffna

1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற வலிகாமம் இடப்பெயர்வின்போது காலொன்றை இழந்த நிலையில் உறவினர்களுடன் செல்ல விரும்பாத அவர் வடமராட்சி வல்லிபுர ஆழ்வர் ஆலய சூழலில் வாழ்ந்து வந்துள்ளார்.