யாழில் பெருந்தொகையான தங்க நகைகள் மாயம்..!

யாழில் பெருந்தொகையான தங்க நகைகள் மாயம்..!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் தங்கநகைகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் (12.09.2023) 53 பவுண் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 100 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் வசித்தவர்கள் நல்லூர் திருவிழாவுக்கு சென்றுள்ள வேளையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் பெருந்தொகையான தங்க நகைகள் மாயம் | An Amount Of Gold Jewelery Has Been Stolen Jaffna