
தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி..!
நேற்றைய தினத்துடன் (13) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (14) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.45 ரூபாயிலிருந்து 316.91 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 329.62 ரூபாயிலிருந்து 331.14 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.72 ரூபாயிலிருந்து 317.68 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 327 ரூபாயிலிருந்து 328 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாயிலிருந்து 319 ரூபாய் மற்றும் 328 ரூபாயிலிருந்து 329 ரூபாய் ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.