தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்.

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்.

தமிழர் விடுதலைக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் உண்ணாவிரதமிருந்து தன்னை ஆகுதியாக்கிய , தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் போராளி ஒருவர் பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.