யாழ். தாவடியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஒருதலை காதலால் விபரீதம் ..!

யாழ். தாவடியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஒருதலை காதலால் விபரீதம் ..!

யாழ்ப்பாணம் - தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் வீட்டு உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று (16.09.2023) அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில், ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். தாவடியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஒருதலை காதலால் விபரீதம் (Photos) | Petrol Bomb Attack In Thavadi Jaffna

இந்நிலையில் குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். தாவடியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஒருதலை காதலால் விபரீதம் (Photos) | Petrol Bomb Attack In Thavadi Jaffna