நேற்றிரவு தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்! இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில்..!

நேற்றிரவு தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்! இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில்..!

அவிசாவளை – ஹியல தல்துவ பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அவிசாவளை காவல்தறையினர் தெரிவித்துள்ளனர்

நேற்றிரவு 11.15 அளவில் நடாத்தப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

குறித்த பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்! இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில்(படங்கள்) | Avisawala Shootting Two Killed Two Injured

துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியில் 4 பேர் பயணித்துள்ளதாக காவல்தறையினர் கூறுகின்றனர்.

இவ்வாறு பயணித்த நால்வரில் இருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ஒருவரை இலக்கு வைத்து, இதற்கு முன்னரும் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டிருந்ததாக காவல்தறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

நேற்றிரவு தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்! இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில்(படங்கள்) | Avisawala Shootting Two Killed Two Injured

சம்பவ இடத்தில் 20திற்கும் மேற்பட்ட T56 ரக துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.