உயர்தரப் பரீட்சைத் திகதிகள் தொடர்பான தீர்மானம்: சுசில் பிரேமஜயந்த சற்றுமுன் அறிவிப்பு.!

உயர்தரப் பரீட்சைத் திகதிகள் தொடர்பான தீர்மானம்: சுசில் பிரேமஜயந்த சற்றுமுன் அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் திகதிகள் குறித்து இறுதி முடிவு எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடல் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்கள் குறைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விசேட உரையாற்றவுள்ளார்.

“க.பொ.த உயர்தர பரீட்சையை குறிப்பிட்ட காலத்துக்கு பிற்போட்டு மாணவர்களுக்கு நியாயத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பினரால் கல்வி அமைச்சரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

இந்த கோரிக்கை குறித்து கல்வி அமைச்சர் தெரிவிக்கையில், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை பிற்போட வேண்டும் என ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. அதனால் இதனை மனிதாபிமானமாக அணுகி, பரீட்சையை பிற்போடுவதா இல்லையா என இன்று விசேட உரை ஒன்றை மேற்கொள்வேன்.

எனது உரையை அடுத்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார். மாணவர்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்.

உயர்தரப் பரீட்சைத் திகதிகள் தொடர்பான தீர்மானம்: சுசில் பிரேமஜயந்த சற்றுமுன் அறிவிப்பு | Announcement Regarding Al Examination Holiday

பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டால் பாடசாலை விடுமுறை தினங்களை குறைத்து, பாடசாலை நாட்களை ஈடுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியிருந்தார்.