யாழ்ப்பாணத்தவர்களுக்கு 33 வருடங்களுக்கு பின் கிடைத்த ஆலய தரிசனம் : இராணுவம் அனுமதி ..!

யாழ்ப்பாணத்தவர்களுக்கு 33 வருடங்களுக்கு பின் கிடைத்த ஆலய தரிசனம் : இராணுவம் அனுமதி ..!

யாழ் - கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 33 வருடங்களுக்கு பின்னர் நேற்று(22) பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டுக்கு பின்னர் நேற்று ஆலயத்தைச் சென்று பார்வையிடுவதற்கும், வழிபாட்டில் ஈடுபடவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

ஆலய தேவஸ்தானத்தினர் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விஐயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தவர்களுக்கு 33 வருடங்களுக்கு பின் கிடைத்த ஆலய தரிசனம் : இராணுவம் அனுமதி (படங்கள்) | Jaffna Amman Temple Puja After 33 Years

இதற்கமைய, இராணுவத்தினரின் அனுமதியுடன் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள அந்த ஆலயத்தினைச் சென்று பார்வையிட்டதோடு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது.

GalleryGallery