யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்!

யாழ்ப்பாணத்தில் உயிர் கொல்லி போதைப்பொருட்களுடன் 20 வயதிற்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நால்வரும் நேற்றுமுன்தினம் (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும்,  இதர போதைப்பொருட்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள் | 4 Youths Arrested With Drugs In Jaffna

குறித்த நபர்களை யாழ்ப்பாண காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.