குருநாகலில் விபத்து : இருவர் பலி : மூவர் படுகாயம்..!

குருநாகலில் விபத்து : இருவர் பலி : மூவர் படுகாயம்..!

குருநாகலில் இன்று (24) காலை தனியார் பேருந்தும் ஒன்றும் முச்சக்கரவண்டியும்  மோதியதில் இடம்பெற்ற விபத்தில்  இருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் குறித்த விபத்து இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதின.

இதன்போது முச்சக்கரவண்டியில்  பயணித்த இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

குருநாகலில் விபத்து : இருவர் பலி : மூவர் படுகாயம் | Accident In Kurunegala 2 Dead 3 Seriously Injured

விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கலேவெல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்களில்  பெண் ஒருவரும் மற்றுமொரு ஆண் மற்றும் 6 வயது சிறுவன் ஆகியோரும் கலேவெல வைத்தியசாலையில் இருந்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.