யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் காரைநகர் - ஊரி பகுதியில் 12 கிலோ 340 கிராம் எடையுடைய கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (24.09.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சந்நேகநபரே போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது | A Person Was Arrested With 12 Kg Drug In Jaffna

மேலும் சந்தேகநபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.