உலக சிறுவர் தினத்தில் சிறுவர்களுக்கு இலவசம்!
ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை பார்வையிடுவதற்கு சிறுவர்களுகு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
