காஸாவில் இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; 8000 இலங்கையர்களின் நிலை என்ன...

காஸாவில் இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; 8000 இலங்கையர்களின் நிலை என்ன...

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் உக்கிரமாகிவரும் நிலையில் காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

காஸாவில் இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; 8000 இலங்கையர்களின் நிலை என்ன? | Firing On Sri Lankan In Gaza Of 8000 Sri Lankansஅவர்களில் பெரும்பாலானோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா நகரங்களை மையமாக கொண்டு வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்  அவர் மேலும் கூறுகையில்,

“தென் பிராந்தியத்தில் இருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் ஊழியர். வயிற்றிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஸாவில் இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; 8000 இலங்கையர்களின் நிலை என்ன? | Firing On Sri Lankan In Gaza Of 8000 Sri Lankansஅவரது நிலை கவலைக்கிடமாக இல்லை. மற்றுமொரு இலங்கை இளைஞரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தொடர்பில் அறிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தூதரகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் 0094 - 716640560 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாக தகவல்களை அனுப்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி இணை முகாமையாளர் (பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு) காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

காஸாவில் இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; 8000 இலங்கையர்களின் நிலை என்ன? | Firing On Sri Lankan In Gaza Of 8000 Sri Lankansமேலும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் தகவல் கிடைக்காவிட்டால் 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் போரில் இரு தரப்பிலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் மேலும் மோசமடைந்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.