பாதுகாப்பு துறைகளில் சீன வர்த்தகத்திற்கு தடை விதித்தது இந்தியா!

பாதுகாப்பு துறைகளில் சீன வர்த்தகத்திற்கு தடை விதித்தது இந்தியா!

பாதுகாப்புத் துறைகளில் சீனாவின் வர்த்தகத்திற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

எல்லை விவகாரத்தில் இந்திய – சீன படைகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  எல்லையைப் பகிர்ந்துக்கொண்டிருக்கும் நாடுகளுடன் இனி வர்த்தகம் கிடையாது என இந்தியா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா பாதுகாப்புத்துறைகளில் இனி வர்த்தகம் செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஒப்பந்தங்கள் கோருவதற்கு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் கொரோனாவுக்கான மருந்துகள் கொண்டு செல்வது போன்ற செயற்பாடுகளுக்கு  மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் டிசம்பரம் மாதம் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது