தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்களால் 17 வயதான சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்களால் 17 வயதான சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

இலங்கையில் மன்னார் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான மன்னார் பெரிய கமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடையவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்களால் 17 வயதான சிறுமிக்கு நேர்ந்த சோகம்! | Three Men Abused A 17 Year Old Girl In Mannar

இதேவேளை, குறித்த 3 நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப் புகைப்படத்தை நண்பர்களிடமும் பரிமாறி கொண்டுள்ளனர்.

அப்புகைப்படங்களை வைத்து சிறுமியை மிரட்டி துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததுடன் அவரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வலுக்கட்டாயமாக அபகரித்து சென்றுள்ளார்.

இவ்வாறான நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தார்,

பின்னர் குறித்த மூவரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.