கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு தவறான முடிவை எடுத்த சிறுமிகள்!

கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு தவறான முடிவை எடுத்த சிறுமிகள்!

கிளிநொச்சி பகுதியில் இரண்டு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன்12 ஏக்கர் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு தவறான முடிவை எடுத்த சிறுமிகள்! | Girls Suicide After Writing Letters In Kilinochchi

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு சிறுமிகளும் தம்மால் இந்த பூமியில் வாழ முடியாது என தெரிவித்து தமது இறப்புக்கு காரணம் தாங்கலே என கடிதம் ஒன்றை இருவரும் அதில் கையொப்பம் இட்ட நிலையில் குறித்த கடிதம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு தவறான முடிவை எடுத்த சிறுமிகள்! | Girls Suicide After Writing Letters In Kilinochchi  

இச்சம்பவம் இரு சிறுமிகளும் தற்பொழுது கல்வி பொதுத் தராதர சாதாரணப் பரீச்சைக்கு தோற்றி பெறுபேறுக்காக காத்திருந்த நிலையில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery