உடலில் ஏற்பட்ட பிரச்சனை: மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

உடலில் ஏற்பட்ட பிரச்சனை: மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் பல வருடங்களாக மூளையில் ஊசியுடனே வாழ்ந்து வந்த சம்பவம் ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப்போர் இடம்பெற்றபோது பல குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைக்காக போராடினர். அவ்வாறு ஒரு குடும்பத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண்ணொருவர் சமீபத்தில் உடல் நலப்பிரச்சனைக்காக மருத்துவனைக்கு சென்றுள்ளார்.

உடலில் ஏற்பட்ட பிரச்சனை: மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Old Woman Lived With A Needle In Her Brain Russiaஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குறித்த பெண்ணின் தலையை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது மூளையில் 3 செ.மீ அளவிலான ஊசி ஒன்று இருந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரஷ்யாவின்  Sakhalin தீவை சேர்ந்த அந்த மூதாட்டி குழந்தையாக இருக்கும்போதே தலையில் ஊசி குத்தப்பட்டுள்ளது.

உடலில் ஏற்பட்ட பிரச்சனை: மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Old Woman Lived With A Needle In Her Brain Russiaஇருப்பினும், அதனால் அவருக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தான் ஆச்சரியம். அதனைத்தொடர்ந்து அந்த ஊசியை அகற்ற வேண்டாம் என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனென்றால், அது அவருக்கு எந்த வலியையும், அதிர்ச்சிகரமான மூளைக் காயத்தின் பிற அறிகுறிகளையும் ஏற்படுத்தவில்லை.

மேலும் அறுவை சிகிச்சை அதிக சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.