
பிரான்ஸ் வாழ் தமிழர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை! மாயமான இளைஞர்.
பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதான தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல் போனவர் avenue Carnot Villeneve saint Georges பகுதியில் வசிக்கும் 28 வயதான மனோகரன் ஆகாஷ் என்பவரே காணாமல் போயுள்ளார் நேற்று முன்தினம் (4) 8.15 மணியளவில் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.
எனினும் வெளியே சென்றவர் அதனை பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். காணாமல்போன தினத்தன்று கறுப்பு ஜாக்கெட் கறுப்பு நிற காலாணிகள் இளைஞர் அணிந்திருந்துள்ளார்.
இந்நிலையில் மாயமான இளைஞரை தேடிவரும் உறவினர்கள் , அவர் தொடர்பில் தகவல் தெரிவித்தால் தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளனர்.
அதன்படி இளைஞர் தொடர்பில் 07-49-18-91-47 என்ற தொலைபேசி இலக்கமூடாக தகவலை தந்துதவுமாறு இளைஞனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.