
யாழ் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதுண்டு யானை பலி!
உத்தரதேவி தொடருந்துடன் மோதுண்டு முறிகண்டியில் யானை ஒன்று பலியாகியுள்ளது.
முல்லைத்தீவு முறிகண்டிப் புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சுமார் 500 மீற்றர் தொலைவில் உத்தர தேவி தொடருந்துடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
நேற்று (21) மாலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த்துக்கொண்டிருந்த உத்தரதேவி தொடருந்துடனேயே யானை மோதுண்டுள்ளது.
யானைகள் கடக்கும் இடம் என்ற எச்சரிக்கை அறிவித்தல் காணப்படுகின்ற பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.