சிகிச்சைக்கு சென்ற பெண் வன்புணர்வு : மருத்துவர் கைது.

சிகிச்சைக்கு சென்ற பெண் வன்புணர்வு : மருத்துவர் கைது.

தான்நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் மருத்துவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில் நடத்தப்படும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு சென்ற பெண் வன்புணர்வு : மருத்துவர் கைது | Doctor Arrested For Rape Of Womanஅதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினரால் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.